/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி வேன் மோதி பால் வியாபாரி சாவு
/
பள்ளி வேன் மோதி பால் வியாபாரி சாவு
ADDED : மார் 21, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி அருகே, கோடாங்கிப்பட்டி கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி, 50; பால் வியாபாரி.
இவர் கடந்த, 19ல் சிங்களகோம்பையில் பால் கறந்துவிட்டு, எருமப்பட்டிக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் சுப்ரமணி மீது மேதியது. இதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுப்ரமணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்ரமணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

