/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'கனிம வள கொள்ளையர்களை குண்டாசில் கைது செய்யணும்'
/
'கனிம வள கொள்ளையர்களை குண்டாசில் கைது செய்யணும்'
ADDED : மார் 29, 2025 07:21 AM
ராசிபுரம்: பா.ம.க., பொதுக்கூழு கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில செயற்-குழு உறுப்பினர் மோகன்ராஜ், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்-றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள மலைப்பகுதி-களில், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனால் வனப்பகுதிகளும், இயற்கை வள பகுதிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கனிம வளத்தை கொள்ளையடிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, திருட்டுத்தனமாக வெட்டப்-படும் கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, மாநில வன்னியர் சங்க செயலாளர் அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.