/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு
/
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று குரூப்-2 தேர்வுக்கு மாதிரி தேர்வு
ADDED : ஜூலை 22, 2025 01:48 AM
நாமக்கல், 'நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், குரூப்-2, 2ஏ போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று துவங்குகிறது' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய மாதிரி தேர்வுகள், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நேரடியாக இன்று காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.
இத்தேர்வு, மண்டல அளவில், ஏழு மாவட்டங்கள் உள்ளடக்கி, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் அசல் தேர்வைபோல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ளது. நாமக்கல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், 2024-25ல், வெளியான தேர்வு முடிவுகளில், குரூப்-4 தேர்வில், 12 பேர், சீருடை பணியாளர் போலீஸ் தேர்வில், 13 பேர், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2ஏ தேர்வில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது இணையதளம் மூலமாகவோ பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விபரத்தை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.