sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

/

நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி

நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி


ADDED : ஜூலை 18, 2025 02:15 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வரும், 29ல் பாச்சல் தனியார் கல்லுாரியில் நடக்கிறது என, கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில், நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மேளா மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது. வரும், 29 காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பாச்சலில் உள்ள ஞானமணி இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்த மேளா நடக்கிறது. வேளாண் பொறியியல் துறை மற்றும் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்கள் மூலம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படும்.

விவசாயிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் நவீன இயந்திரங்கள் மற்றும் அவைகளின் பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். முன்னணி டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகள் தயாரிக்கும் மஹேந்திரா, ஜான்டீர், நியூ ஹாலண்ட், சுராஜ், வி.எஸ்.டி., கிர்லாஸ்கர் போன்ற கம்பெனிகள் அரங்குகளை அமைத்து கருவிகளின் பராமரிப்பு குறித்து விளக்கமளிக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us