/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 10, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை பா.ம.க., இளைஞரணி செயலாளர் சக்திவேல், அரியாகவுண்டம்பட்டி த.வெ.க.,வை சேர்ந்த சவுந்தர் உள்ளிட்ட மாற்று கட்சியினர், 70க்கும் மேற்பட்டோர், நேற்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். அனைவருக்கும் ராஜேஸ்குமார், சால்வை அணிவித்து வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, நாமகிரிப்பேட்டை செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் செய்திருந்தார்.

