sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பு தடை விதிக்க கேரள கவர்னரிடம் எம்.பி., கோரிக்கை

/

தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பு தடை விதிக்க கேரள கவர்னரிடம் எம்.பி., கோரிக்கை

தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பு தடை விதிக்க கேரள கவர்னரிடம் எம்.பி., கோரிக்கை

தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பு தடை விதிக்க கேரள கவர்னரிடம் எம்.பி., கோரிக்கை


ADDED : ஜன 19, 2025 07:03 AM

Google News

ADDED : ஜன 19, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'கேரளாவில், தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், அம்மாநில கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்-துள்ளார்.

மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில், லோக்சபா நிலைக்குழு கூட்டம், நேற்று முன்தினம் கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்தது. நாமக்கல் லோக்-சபா தொகுதி கொ.ம.தே.க., - எம்.பி., மாதேஸ்வரன், அக்கூட்-டத்தில் கலந்துகொண்டார். அங்கு, கேரளா கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றிச்செல்லும் லாரிகளை, கேரளா மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகா-ரிகள், உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்குப்பதிவு செய்து தொல்லை செய்கின்றனர்.இதை கைவிட வேண்டும். மேலும், கேரளா மருத்துவ கழிவு-களை, தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும். கேரளா மாநிலத்தில் ஓடிக்கொண்டி-ருக்கும், தமிழக காஸ் டேங்கர் லாரிகளுக்கு, போலீசார் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர்.அதில் தவறு நடக்கிறது. அபராதம் விதிக்கும்போது, சம்பந்தப்-பட்ட லாரி டிரைவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். கேரளா மாநிலத்தில் வசிக்கும், கொங்கு வேளாளர் சமூகத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us