/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடுகு புண்ணாக்கு, சோயா 3,700 டன் வரத்து
/
கடுகு புண்ணாக்கு, சோயா 3,700 டன் வரத்து
ADDED : ஆக 22, 2024 01:48 AM
நாமக்கல், ஆக. 22-
மத்தியபிரதேசம், பீஹார் மாநிலங்களில் இருந்து, 1,300 டன் கடுகு புண்ணாக்கு, 2,500 டன் சோயா, சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், சின்னசோளம், செஞ்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து, சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருளான, 1,300 டன் கடுகு புண்ணாக்கு மத்தியபிரதேசத்தில் இருந்தும், 2,500 டன் சோயா, பீஹார் மாநிலத்தில் இருந்தும், சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது. பின், அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.