sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்

/

மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்

மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்

மர்ம விலங்கு அட்டகாசம்: மாதிரிகள் சேகரிப்


ADDED : ஜன 01, 2025 01:36 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு

சேந்தமங்கலம், ஜன. 1-

கொல்லிமலையில், கடந்த வாரம் மர்ம விலங்கு கடித்து, 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகளை கடித்து குதறிய விலங்கு சிறுத்தை புலி என, விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொல்லிமலையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர், 'டிராக் கேமரா' பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வெள்ளக்குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் விஜயகுமார், ராஜேந்திரன், அன்பரசு ஆகியோரது ஆட்டுப்பட்டிகளில், 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.

இதில், அனைத்து ஆடுகளும் உயிரிழந்த நிலையில், நாமக்கல் வன அலுவலர் கலாநிதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பழனிவேல் மற்றும் அதிகாரிகள், உயிரிழந்த கால்நடைகளை ஆய்வு செய்தனர். மேலும், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து, மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள உயர்நிலை வன பாதுகாப்பு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us