/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு டீக்கடையில் மர்ம பொருள் வெடித்தது!
/
திருச்செங்கோடு டீக்கடையில் மர்ம பொருள் வெடித்தது!
ADDED : பிப் 16, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: திருச்செங்கோட்டில் பூட்டி இருந்த டீ கடையில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு, பூட்டி இருந்த டீ கடையில் மர்ம பொருள் வெடித்தது. கடையில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வில் மேற்கொண்டுள்ளனர்.
கடைக்குள் எந்த விதமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன, மின்கசிவு காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

