sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சூதாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது

/

சூதாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது

சூதாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது

சூதாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது


ADDED : ஆக 22, 2011 01:55 AM

Google News

ADDED : ஆக 22, 2011 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலூர்: காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ப.வேலூர், கிழக்குத்தெரு பகவதியம்மன் கோவில் பின்புறம் காசு வைத்து சூதாடுவதாக, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, டி.எஸ்.பி., தம்பிதுரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பூபால் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காசு வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து, காசு வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (35), நல்லேந்திரன் (42), நரசிம்மன் (27), பெரியசாமி (25), சூரியபிரகாஷ் (28) ஆகிய ஐந்து பேரை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ப.வேலூர் பகுதியில் தொடர்ந்து சூதாட்டம் நடந்து வருவதும், அவர்களை போலீஸார் பிடிப்பதும் வாடிக்கையாக அரங்கேறி வருகிறது. அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே. சூதாட்ட மோகத்தால் தங்களது பணம், நகை உள்ளிட்டவற்றை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிலை ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.








      Dinamalar
      Follow us