sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எட்டிமடைபுதூர்-பக்தவச்சலம் நகர் வழியாகபுதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

/

எட்டிமடைபுதூர்-பக்தவச்சலம் நகர் வழியாகபுதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

எட்டிமடைபுதூர்-பக்தவச்சலம் நகர் வழியாகபுதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்

எட்டிமடைபுதூர்-பக்தவச்சலம் நகர் வழியாகபுதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்கம்


ADDED : செப் 12, 2011 03:47 AM

Google News

ADDED : செப் 12, 2011 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: எட்டிமடைபுதூர்-பக்தவச்சலம் நகர் வழியாக, புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார்.

திருச்செங்கோடு நகராட்சி, 4வது வார்டு பகுதியான எட்டிமடைபுதூர், பக்தவசலம் நகர் பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், ஆறு கி.மீ., தொலைவில் உள்ள நகர் பகுதிக்கு வந்து செல்லும் நிலை இருந்து வந்தது.அதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அவர்கள், தங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு எட்டிமடைபுதூர், பக்தவச்சலம் வழித்தடத்தில் புதிய பஸ் போக்குவரத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., சம்பத்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து, திருச்செங்கோட்டில் இருந்து பெரியமணலிக்கு செல்லும், 14ம் எண் வழித்தட பஸ்சை, மலை சுற்றுப்பாதை பகுதியில் இருந்து சாலைப்பாளையம், வழியாக எட்டிமடைபுதூர், பக்தவச்சலம் நகர் பகுதிகளுக்கு செல்லும்படி புதிய பஸ் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.அதன்படி, புதிய வழித்தட பஸ் போக்குவரத்து துவக்க விழா திருச்செங்கோட்டில் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பொறியாளர் இளங்கோ, தே.மு.தி.க., நகரச் செயலாளர் தம்பி மனோகரன், ஒன்றிச் செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சம்பத்குமார் கொடியசைத்து புதிய போக்குவரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us