sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேதமாகும் பூங்கா சிலைகள்நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : செப் 22, 2011 02:33 AM

Google News

ADDED : செப் 22, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பூங்காவில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது.

அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டம் மற்றும் சிறுவர்கள் விளையாடும் வகையிலான சீசா, ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. தவிர, பூங்காவின் ஆங்காங்கே டைனோசர், யானை, மயில் போன்ற வன விலங்குகளின் சிமெண்ட் சிலைகள் அழகுக்காக வைக்கப்பட்டுள்ளன.வார நாள் மற்றும் விடுமுறை தினங்களில், மக்கள் பூங்காவை பார்வையிடுவர். குறிப்பாக விடுமுறை தினத்தில் பலர் குடும்பத்தினருடன், பூங்காவிற்கு வருகின்றனர். விஷமிகள் சிலர், பூங்காவினுள் அழகுக்காக வைக்கப்பட்டுள்ள விலங்குகளின் பொம்மைகளை சேதப்படுத்துகின்றனர்.அதனால் பூங்கா பொலிவிழந்து வருகிறது. இதை பூங்கா பராமரிப்பு செய்யும் துøயினர் கவனத்தில் கொண்டு, பூங்காவின் அழகை சிதைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us