/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்
/
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்
நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்
ADDED : மே 09, 2024 06:40 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசியில், தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த ஏப்., 23ல் தேர் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல் நடந்தது. 24ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 25ல் கம்பம் நடும் விழாவும், இதையடுத்து தினந்தோறும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் பால்குட ஊர்வலம், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு தீமிதி விழா தொடங்கியது. முன்னதாக, கோவில் பூசாரிகள் கரகத்துடன் தீ மிதித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதிக்க தொடங்கினர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். அவர்களுக்கு லட்டு, கூழ், தயிர் சாதம், மோர் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சரவணன், விழாக்குழு தலைவர் அன்பழகன், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதி வழியாக சுற்றி வந்த தேர், மாலை, 7:00 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.