ADDED : ஜன 13, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை: விவேகானந்தர் பிறந்தநாளை, தேசிய இளைஞர் தினமாக கொண்-டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று நாமகிரிப்பேட்டை விவேகானந்தர் யோகா முகாமில், தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆனந்த ஆஸ்ரமத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. அமைப்பாளர் அமர்நாத் தலைமையில் இளைஞர்கள் யோகா செய்தனர். தொடர்ந்து விவேகானந்தர் சிகாகோவில் ஆற்-றிய உரை, அவரின் எதிர்கால பார்வை குறித்து அமர்நாத் பேசினார். சூரிய நமஸ்காரம் மூலம் ஆரம்பித்த யோகா பயிற்சி, 15 வகையான யோகா மற்றும் தேச பக்தி பாடலுடன் நிறைவ-டைந்தது.