/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
/
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED : டிச 20, 2025 06:55 AM
மல்லசமுத்திரம்: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்திபெற்ற காளிப்-பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. மார்கழி அமாவாசை-யான, நேற்று மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்-தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பலவகை மலர்-களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பரிவார தெய்வங்க-ளுக்கு, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. பெண்கள், வெற்றிலை மீது நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்-பட்டது.

