sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் தாராளம் வடமாநில தொழிலாளர்கள் மோதலால் பரபரப்பு

/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் தாராளம் வடமாநில தொழிலாளர்கள் மோதலால் பரபரப்பு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் தாராளம் வடமாநில தொழிலாளர்கள் மோதலால் பரபரப்பு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் தாராளம் வடமாநில தொழிலாளர்கள் மோதலால் பரபரப்பு


ADDED : ஜூலை 22, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், வாரச்சந்தைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். வாழவந்தியில் அடிக்கடி இச்சம்பவம் நடப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மோகனுார் பி.டி.ஓ., கட்டுப்பாட்டில், வளையப்பட்டி, எஸ்.வாழவந்தி ஆகிய பஞ்.,களில், இரண்டு வாரச்சந்தை செயல்படுகின்றன. அதில், எஸ்.வாழவந்தி சந்தை, வாரந்தோறும் திங்கட்கிழமை மாலை, 4:00 முதல், இரவு, 8:00 மணி வரை வியாபாரம் நடக்கிறது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவாயிகள், தங்கள் நிலங்களில் விளையும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை அறுவடை செய்து வந்து விற்பனை செய்வது வழக்கம்.

தற்போது, வாழவந்தி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலைகளில், வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள், அதிகளவில் காய்கறிகளை மூட்டை மூட்டையாக வாங்கிச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த ஆண்கள், வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கும்போது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி, தங்களுக்குள் கோஷ்டி மோதலை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இதேபோல் வாரச்சந்தையில், வடமாநிலங்களை சேர்ந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் முடிந்தது. இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, வாரச்சந்தை பகுதியில், இரண்டு தரப்பை சேர்ந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினர். அதை பார்த்து பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதற்கிடையில், முக்கிய நபர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றபோது, அடிவாங்கியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த பரமத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும், மற்ற வடமாநில தொழிலாளர்களும் தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு இருந்த இடம் தெரியாமல் சிட்டாக பறந்தனர்.

வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. காரணம். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பகிறது. அவற்றை பயன்படுத்தும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us