/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை
/
கிணற்றில் குதித்து சத்துணவு உதவியாளர் தற்கொலை
ADDED : ஜூலை 20, 2025 05:35 AM
நாமக்கல்: சேலம், வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கலைவாணி, 40. இவர், வெள்ளாளகுண்டம் காமராஜபுரத்தில் உள்ள பஞ்., தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணி-யாற்றி வந்தார்.
இவருக்கு, 10 நாட்களுக்கு முன் திடீரென மனம்நலம் சரியில்-லாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாமக்கல் மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, கலைவாணி, மாயம்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ஒரு கிணற்றில் குதித்துள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தீயணைப்பு துறையினர் உதவி-யுடன் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கலைவாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்-தனர். இது குறித்து, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.