sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆன்லைன் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்தவர் விபரீத முடிவு

/

ஆன்லைன் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்தவர் விபரீத முடிவு

ஆன்லைன் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்தவர் விபரீத முடிவு

ஆன்லைன் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்தவர் விபரீத முடிவு


ADDED : ஜூன் 20, 2025 01:46 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம், குமாரபாளையத்தில், ஆன்லைன் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயணா நகரை சேர்ந்தவர் கார்த்தி, 36, தனியார் நிறுவன பணியாளர். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்துள்ளது. இவரது மனைவி ராஜேஸ்வரி, 32, பலமுறை கண்டித்துள்ளார். இதனால் பல இடங்களில் கடன் வாங்கி, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். பலமுறை வீட்டை விட்டு வெளியில் சென்று, இரண்டு நாட்களில் திரும்பி வந்தும் உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியில் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை, 5:30 மணியளவில் வீட்டுக்கு வந்த கார்த்தி, ஸ்டோர் ரூம் சென்று கதவை தாழிட்டு கொண்டார். இவரது உடன் பணியாற்றுவோர் மற்றும் ராஜேஸ்வரி கதவை தட்டியும் திறக்கவில்லை. அதனால் அவர்கள் சென்று விட்டனர். பால் ஊற்ற வந்த நபர், ஏணி வைத்து ஏறி, உள்ளே பார்த்த போது, மின் விசிறியில் சேலையால் துாக்கில் தொங்கிய நிலையில் கார்த்தி இருந்துள்ளார். பின்னர், கதவை உடைத்து கார்த்தியை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us