ADDED : ஏப் 29, 2025 01:41 AM
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,ல் காய்கறி மார்க்கெட் உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். தற்போது, கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் பயணிகள், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோடை வெப்பம் மற்றும் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட போதுமான அளவு பெரிய நிழற்கூடம் இல்லை. இந்நிலையில், தி.மு.க., சார்பில் மெட்டாலாவில் தண்ணீர்பந்தல், நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தண்ணீர்பந்தலை திறந்து வைத்தார்.
மேலும், பயணிகளுக்கு குளிர்பானம், நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் வழங்கினார். தொடர்ந்து, இந்த பந்தலில் குடிநீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினார். டவுன் பஞ்., தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

