ADDED : ஏப் 30, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:
ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பரமத்தி, பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 10,200 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
கடந்த வாரம், அதிகபட்சம் கிலோ, 61.75 ரூபாய், குறைந்தபட்சம், 42.62 ரூபாய், சராசரியாக, 60 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 95,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 58.29 ரூபாய், குறைந்தபட்சம், 37.30 ரூபாய், சராசரியாக, 57.19 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 97,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.