/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
/
ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ADDED : ஏப் 14, 2025 06:42 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்தனுார் மற்றும் ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். அவ்வாறு கொண்டு வரப்படும், நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டு வாங்கி செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்த விவசாயிகள், ஏமாற்றத்துடன் திரும்ப கோழிகளை கொண்டு சென்றனர்.
மேலும், வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்து விடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை விரும்பி சமைப்பதில்லை. ஒரு சில வியாபாரிகள், பண்ணை கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்கின்றனர். அதனால், வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர், என விவசாயிகள் தெரிவித்தனர்.

