/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெயின்டர் கொலை வழக்கு: 2 பேர் கைது
/
பெயின்டர் கொலை வழக்கு: 2 பேர் கைது
ADDED : அக் 30, 2024 06:31 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்துள்ள சிலுவம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 44; பெயின்டர். இவர், சில நாட்களுக்கு முன், மரூர்பட்டி ஏரிக்கரையில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
நாமக்கல் போலீசார் நடத்திய விசாரணையில், நல்லிபாளையத்தை சேர்ந்த சதீஷ், 27, சேலம் ரோடு, முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ரித்திஷ், 19, ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இவர்களில் சதீஷ், ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ரித்திஷ் வேலை செய்து வருகிறார். இறந்த செந்தில்குமார், பெயின்டிங் வேலை செய்து வருவதால், சதீஷ் உடன் நட்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பணம், 40,000 ரூபாயுடன் செந்தில்குமார் வந்ததுள்ளார். அவருடன் அப்போது இருந்த சதீஷ், ரித்திஷ் இருவரும் வந்துள்ளனர். செந்தில்குமாரிடம் இருந்த பணத்தை சதீஷ், ரித்திஷ் இருவரும் கேட்டுள்ளனர்.
அவர் கொடுக்க மறுக்கவே, இருவரும் சேர்ந்து, செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை பிடுங்கி உள்ளனர். அப்போது நிலைதடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்துள்ளார். அதில் கல்லில் தலைபட்டு, படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படியே விட்டு சென்றால் பணத்தை பிடுங்கியதை வெளியே சொல்லிவிடுவார் என எண்ணி, அருகில் கிடந்த கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.பெயின்டர் இறந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த நாமக்கல் போலீசார் சதீஷ், ரித்திஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

