sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

/

'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை

'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை


ADDED : ஜூலை 21, 2025 08:15 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி, 12 நாட்கள் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்காக, தி.மு.க., கூட்டணி உட்பட, 21 கட்சிகள் குரல் கொடுத்தும், முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லையே என வேதனையில் உள்ளனர்.

தமிழகத்தில், 2012ல், பகுதிநேர ஆசிரியர்களாக, 16,549 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களால், ஆறு முதல் பிளஸ் 2 வரை கணினி, ஓவியம், உடற்கல்வி என, 30 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வெறுத்த பலர், வேறு பணிக்குச் சென்றுவிட்டநிலையில், தற்போது, 12,000 பேர் மட்டும் உள்ளனர்.

இந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக, 2016, 2021 சட்டசபை தேர்தல்களின்போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. 2021ல் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் போராட்டம் நடத்தியும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

கடைசியாக ஜூலை, 8ல் சென்னையில் போராட்டம் துவங்கி, 12 நாட்கள் நடத்தினர். 1000க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

அ.தி.மு.க., பா.ம.க., உட்பட பல்வேறு கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணியில் உள்ள இ.கம்யூ., மனிதநேய மக்கள் கட்சி உட்பட, 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், அமைச்சர் நிலையில் கூட போராட்ட ஆசிரியர்களிடம் பேச்சு நடத்த வராததால், மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சி காலம் நிறைவடைய இன்னும், 280 நாட்கள் தான் உள்ளன. வாழ்க்கை நடத்த முடியாத அளவு குறைந்த சம்பளத்தில், 13 ஆண்டுகள் கடந்து விட்டன. கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் கூட, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், 30 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் நின்று போராட வேண்டியுள்ளது. கொடுத்தவாக்குறுதியைத்தான் நிறைவேற்ற கேட்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us