/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மோதி விபத்து நடந்து சென்றவர் பலி
/
டூவீலர் மோதி விபத்து நடந்து சென்றவர் பலி
ADDED : ஜூலை 27, 2025 12:45 AM
குமாரபாளையம், குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் முருகன், 47; ஜவுளி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, பள்ளிப்பாளையம் சாலை, ராகவேந்திரா கல்லுாரி எதிரே நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த, 'பஜாஜ் பல்சர்' டூவீலர், முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முருகன் இறந்துவிட்டார்.
விபத்துக்கு காரணமான, ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தை சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி ஆண்டிமுத்து, 45, உடன் வந்த நண்பர் கூலி தொழிலாளி சுப்பிரமணி, 72, ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள், பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

