/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் திருட்டால் அச்சத்தில் மக்கள்
/
தொடர் திருட்டால் அச்சத்தில் மக்கள்
ADDED : டிச 07, 2024 06:58 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, கடந்த, 4 இரவு வீட்டின் முன் நிறுத்-தப்பட்டிருந்த ஸ்பிளன்டர் பிளஸ் டூவீலரை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றார். இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த, 'சிசி-டிவி' கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்-றனர்.இதேபோல், அன்னை சத்யா நகருக்கு அடுத்துள்ள தாஜ்நகர் பகு-தியிலும், கடந்த, 5 இரவு, சரக்கு வாகனத்தில் இருந்த
பேட்ட-ரியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். பேட்டரியை திருடிய, 2 பேரை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.அன்னை சத்யா நகர் சுற்று வட்டார பகுதிகளில், இரவு நேரத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால், அப்பகுதியில்
வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், இரவு நேரத்தில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை மேற்-கொள்ள
வேண்டும் என,அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.