sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வீடுகளுக்குள்ளும், குடியிருப்பையும் சூழ்ந்த மழைநீர் வாகனங்களை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

/

வீடுகளுக்குள்ளும், குடியிருப்பையும் சூழ்ந்த மழைநீர் வாகனங்களை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

வீடுகளுக்குள்ளும், குடியிருப்பையும் சூழ்ந்த மழைநீர் வாகனங்களை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்

வீடுகளுக்குள்ளும், குடியிருப்பையும் சூழ்ந்த மழைநீர் வாகனங்களை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்


ADDED : டிச 22, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 22-

நாமக்கல்லில் பெய்த மழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதனால், ஆவேசம் அடைந்த மக்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 25 வரை இதே நிலை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல்வேறு இடங்களில் கனமழையும், ஒரு சில பகுதியில் லேசான மழையும் பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, கணபதி நகரில், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், வீடுகளையும் சூழ்ந்தது. அதனால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், அவ்வழியாக சென்ற வாகனங்களை சிறைபிடித்தனர். நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையிலான போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் சென்று சமரசம் செய்தனர்.

தொடர்ந்து, மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஒவ்வொரு மழையின் போதும், இதே நிலை தொடர்வதால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், நாமக்கல் - மோகனுார் சாலை கொண்டிசெட்டிப்பட்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது. அவ்வாறு வெளியேறிய நீர், சாலையில் தேங்கியது. அதனால், அப்பகுதியில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு மாற்றிவிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:

மங்களபுரம், 23.80, மோகனுார், 10, நாமக்கல், 23, புதுச்சத்திரம், 18, சேந்தமங்கலம், 16, கலெக்டர் அலுவலகம், 14, கொல்லிமலை, 2 என, மொத்தம், 106.80 மி.மீ., மழை பெய்துள்ளது.






      Dinamalar
      Follow us