sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 01, 2025 01:12 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கரூர் சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்-சேலம் பழைய சாலையில், சர்ச் கார்னர் அருகே வெங்கமேட்டுக்கு செல்லும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. மேலும், அதே பகுதியில் வாங்கலுக்கு செல்லும் சாலையும், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சாலையும் செல்கிறது. அருகில், அரசு மருத்துவமனை உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால், சர்ச் கார்னர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. ஒரு சில நாட்களில் மட்டும் அந்த பகுதியில், போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். இந்த பகுதியில் விபத்து ஏற்படும் சமயத்தில், சேலம் பழைய சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, சர்ச் கார்னர் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும்.இதுகுறித்து, சர்ச் கார்னர் பகுதி மக்கள் கூறியதாவது:

சேலம் பழைய சாலை, சர்ச் கார்னர் பகுதியில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், விபத்து நடக்கும் சர்ச் கார்னர் பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். இதை தவிர, அந்த பகுதியில் வசித்து வரும் மக்களும் செல்கின்றனர். அப்போது, கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சேலம் பழைய சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் மூலம் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே, சர்ச் கார்னர் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us