sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி மக்கள் அவதி

/

15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி மக்கள் அவதி

15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி மக்கள் அவதி

15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி மக்கள் அவதி


ADDED : டிச 03, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 2-

ராசிபுரம் அடுத்த காக்காவேரி கிராமத்தில், 15 ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி புதிய காலனி மக்கள் அவதிப்படுகின்றனர்.

ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய காலனி பகுதியில், மக்கள் வீடு கட்டத்தொடங்கினர். தற்போது, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதி மக்களுக்கு, 15 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. அருகில் உள்ள பகுதியில் இருந்து தண்ணீரை எடுத்து கொள்கின்றனர். குடிப்பதற்கு நீண்ட துாரம் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் இப்பகுதிக்கு வந்த, பா.ஜ., நிர்வாகிகளிடம் பெண்கள் சரமாரியாக புகார் அளித்தனர். ஜல் ஜீவன் திட்டத்தில் கூட தண்ணீர் வழங்காததால் அதிருப்தி அடைந்த, பா.ஜ., நிர்வாகிகள் இது குறித்து பி.டி.ஓ., - கலெக்டர் ஆகியோருக்கு உடனடியாக ஆன்லைனில் புகார் அனுப்பினர்.






      Dinamalar
      Follow us