sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பல ஆண்டாக துார்வாராத வாய்க்கால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியகுட்டை

/

பல ஆண்டாக துார்வாராத வாய்க்கால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியகுட்டை

பல ஆண்டாக துார்வாராத வாய்க்கால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியகுட்டை

பல ஆண்டாக துார்வாராத வாய்க்கால் மழை பெய்தும் வறண்டு கிடக்கும் பெரியகுட்டை


ADDED : மே 26, 2024 07:33 AM

Google News

ADDED : மே 26, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம் : சின்னமணலி கிராமத்தில், பெரியகுட்டைக்கு செல்லும் வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாராமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், தற்போது மழை பெய்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

எலச்சிபாளையம் யூனியன், சின்னமணலி கிராமத்திற்கு உட்பட்ட, சேர்வாம்பட்டி பகுதியில், 5 ஏக்கர் நிலப்பரப்பில், பெரியகுட்டை எனும் பெயரில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு, சின்னமணலி ஊர்குட்டையில் இருந்து நீர்வழிப்பாதையான வாய்க்காலின் வழியாக, பெரியகுளத்திற்கு பல ஆண்டுகளாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த வாய்க்கால், 15 அடி முதல், 22 அடி அகலம் கொண்டது. இந்த வாய்க்காலை பல ஆண்டுகளாக துார்வாராமல், மக்கள் சிலர் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில தினங்களாக மழை பெய்தும் வாய்க்கால் துார்வாராததால், குளத்தில் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லாமல் வற்றி காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் பெய்த கோடைமழை வாய்க்காலில் செல்ல வழியில்லாமல், அருகிலுள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து, ஒரு விவசாய கிணற்றுக்கு போடப்பட்டிருந்த வேலியை உடைத்து கிணற்றுக்குள் இருந்த தண்ணீர் எடுத்துவிடும் மோட்டார், மண்ணால் மூடியது.

எனவே, தேவையான அளவு மழைப்பொழிவு இருந்தும், 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுட்டையில் போதிய தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால், சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு வாய்க்காலை துார்வாரவும், ஆக்கிரமிப்பை அகற்றியும், பெரியகுட்டைக்கு நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us