/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நைனாமலை பெருமாள் கோவிலுக்கு சாலை வழியாக செல்ல அனுமதி தேவை
/
நைனாமலை பெருமாள் கோவிலுக்கு சாலை வழியாக செல்ல அனுமதி தேவை
நைனாமலை பெருமாள் கோவிலுக்கு சாலை வழியாக செல்ல அனுமதி தேவை
நைனாமலை பெருமாள் கோவிலுக்கு சாலை வழியாக செல்ல அனுமதி தேவை
ADDED : செப் 05, 2025 01:14 AM
சேந்தமங்கலம், நைனாமலை மலையின் உச்சியில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை வழியாக செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
சேந்தமங்கலம் அடுத்துள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில், 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த புரட்டாசி மாத விழாவில் கலந்து கொள்ள, நாமக்கல் மட்டுமின்றி அருகில் உள்ள சேலம், திருச்சி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
அப்போது அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்ட பின், 3,600 படிகள் ஏறி வரதராஜ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் செல்வர். இந்நிலையில், பக்தர்கள் மலை மீது உள்ள கோவிலுக்கு எளிதாக சென்று வர, 7 கி.மீ., துாரத்திற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. அதில் தார் சாலை அமைக்கப்படாமல் மண் பாதையாக உள்ளது. எனவே வரும் புரட்டாசி மாதத்தில், சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களை மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.