sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

/

பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்

பிபின் ராவத் பலியான விபத்துக்கு விமானியின் தவறே காரணம்


ADDED : டிச 20, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, டிச. 20-

முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு, விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லுாரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, 2021 டிச., 8ல், அப்போதைய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் டில்லியில் இருந்து கோவை சூலுார் விமானப்படை தளத்துக்கு வந்தார்.

அங்கிருந்து ஹெலிகாப்டரில் அவர் வெலிங்டன் புறப்பட்டார். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் பலியாகினர்.

இந்நிலையில், 2017 -- 2022 வரையிலான ராணுவ நிலைக்குழு அறிக்கை, லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017 - 2022 வரை 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், குன்னுாரில் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.

இதற்கு விமானியின் தவறே காரணம். வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தினார். பின் நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த ரிகார்டரில் பதிவான விபரங்களின்படி இது தெரிய வந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us