ADDED : மே 05, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
அருகே, முத்துக்காப்பட்டியில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன்,
மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் ஆண்டுதோறும்
சித்திரை மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், இந்தாண்டு பிடாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நட்டு,
காப்பு கட்டுதலுடன் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில்,
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், 15வது நாள் மகா
மாரியம்மன் கோவில் காப்பு கட்டு விழா நடக்கிறது.