/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒன்பதாம்படி ஆற்றோர பகுதியில் நெகிழி சேகரிப்பு
/
ஒன்பதாம்படி ஆற்றோர பகுதியில் நெகிழி சேகரிப்பு
ADDED : ஜூன் 29, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றோர பகுதியான ஒன்பதாம்படி பகுதியில், நெகிழி சேகரிப்பு பணி நேற்று நடந்தது. அப்போது, ஒன்பதாம்படி பகுதியில் பரவலாக கிடந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், 930 கிலோ சேகரிக்கப்பட்டது.
அந்த கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்த, பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக, 'மஞ்சள் பை' பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மஞ்சள் பை வழங்கப்பட்டது. கமிஷனர் தயாளன், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.