ADDED : பிப் 03, 2026 06:53 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றிய, பேரூர், பா.ம.க., சார்பில், மாபெரும் கண்டன முழக்க ஆர்ப்-பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குணசே-கரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், வெண்ணந்துார் பஞ்.,க்குட்பட்ட முத்துக்குமார சுவாமி கோவில் அருகே உள்ள அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் ஸ்டாண்ட் அமைத்து தர வேண்டும். காமராஜர் சிலை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை, நடுநிலை, உயர்நிலை பள்-ளியாக தரம் உயர்த்த வேண்டும். காவலர் குடியி-ருப்பு முதல் மின்னக்கல் பிரிவு சாலை வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிர-மிப்புகளை அகற்ற வேண்டும்.
நகர்புற மின்சார வாரியத்தில், 10,000க்கும் மேற்-பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின்சார பராம-ரிப்புக்கு களப்பணியாளர்கள், 18 பேர் இருக்க வேண்டிய பணியில் ஒருவர் மட்டுமே உள்ளார். மீதமுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

