/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
/
சிறுவனுக்கு தொல்லை வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : நவ 16, 2024 01:27 AM
சிறுவனுக்கு தொல்லை
வாலிபருக்கு 'போக்சோ'
நாமகிரிப்பேட்டை, நவ. 16-
நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சதீஸ்குமார், 25; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுவனிடம் அடிக்கடி சதீஸ்குமார் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுவனுக்கு, சதீஸ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின் சிறுவன், தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளான். சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகார்படி, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் சதீஸ்குமாரை கைது செய்தனர்.