sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் விழாவில் இரு பிரிவினர்இடையே மோதல் சூழலால் போலீசார் குவிப்பு

/

மாரியம்மன் கோவில் விழாவில் இரு பிரிவினர்இடையே மோதல் சூழலால் போலீசார் குவிப்பு

மாரியம்மன் கோவில் விழாவில் இரு பிரிவினர்இடையே மோதல் சூழலால் போலீசார் குவிப்பு

மாரியம்மன் கோவில் விழாவில் இரு பிரிவினர்இடையே மோதல் சூழலால் போலீசார் குவிப்பு


ADDED : ஏப் 23, 2025 02:01 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,:நாமக்கல் அருகே, மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில், இரு பிரிவினரிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் அருகே வீசாணத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோவில் விழாவை நடத்துவதற்கும், உள்ளே சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பட்டியலின மக்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபட மட்டும் தான் அனுமதி உள்ளதே தவிர, திருவிழா நடத்துவதற்கும், சுவாமியின் கருவறைக்குள் செல்லவும் அனுமதிக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாக கோவிலை கட்டி திருவிழா நடத்தி வருகிறோம். பட்டியலின மக்கள் அந்த பகுதியிலேயே, கோவில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், புதிதாக கட்டிய கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என அவர்கள் கூறுவது நியாயமற்றது எனவும் கூறினர்.

மேலும் கோவில் முன் இருந்த கம்பத்தை, விழாவை நடத்த ஏற்பாடு செய்த பிரிவினர் பிடுங்கி கோவில் அருகே உள்ள கிணற்றில் விட்டு விட்டு, தாங்கள் திருவிழா நடத்தவில்லை என கூறினர். இதை தொடர்ந்து விழா நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து இரு பிரிவினரிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. எனவே, நாமக்கல் ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதால், அனைத்து சமுதாய மக்களும் வழிபட உரிமை உள்ளது. எனவே, பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர். அப்போது, கோவிலை விட்டு போலீஸ் வெளியேற வேண்டும் என, சில பெண்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us