/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் தொகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு
/
குமாரபாளையம் தொகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 05, 2024 01:31 AM
குமாரபாளையம்:ஈரோடு
லோக்சபா தொகுதியில், நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம்
சட்டசபை தொகுதி அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு
நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல்
பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்
மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை
அதிகாரிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு லோக்சபா
தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக
விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், பூத் சிலிப்
வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தலில் ஈரோடு
பாராளுமன்ற தொகுதியில், அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி
வகுப்பு குமாரபாளையத்தில் நடந்தது.
குமாரபாளையம் சட்ட சபை
தொகுதிக்கு உட்பட்ட, 279 ஓட்டுப்பதிவு மையங்களில் பாதுகாப்பு வசதி
குறித்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு,
ஓட்டுச்சாவடி அருகில் உள்ள வீடு, கடைகள் ஆகியோரின் தகவல்களை
சேகரிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகள் உறுதி செய்திட வேண்டும் என
ஆலோசனை வழங்கினார்.
இதன் ஒரு கட்டமாக பொதுமக்கள் அச்சமின்றி
ஓட்டுப்பதிவு செய்திட வேண்டும் என்பதை, விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில், கொடி அணிவகுப்பு நடந்தது. ஏ.டி.எஸ்.பி.,
செல்வராஜ், டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில், காவேரி நகர், காவேரி
பாலம் பிரிவு பகுதியில் தொடங்கி, இடைப்பாடி சாலை, சேலம் சாலை வழியாக
ராஜம் தியேட்டர் முன் நிறைவு பெற்றது.

