ADDED : செப் 06, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார் :ப.வேலுார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், கடந்த ஜூன், 21ல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதனால், பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி, ப.வேலுாருக்கு பொறுப்பு இன்ஸ்பெக்டராக கவனித்து வந்தார்.
இதையடுத்து, ஈரோடு எஸ்.பி., ஆபிசில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.