sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

/

கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

கலெக்டர் அலுவலகம், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா


ADDED : ஜன 13, 2024 03:52 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். அதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.விழாவை முன்னிட்டு, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், மியூசிக் சேர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லேமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, கலெக்டர் உமா பரிசு வழங்கினார்.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* அதேபோல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், முதல்வர் கோவிந்தராசு தலைமையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி மாணவியர், பாரம்பரிய உடையான புடவையில் பங்கேற்றனர். வண்ண கோலமிட்டும், புதுப்பானையில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.






      Dinamalar
      Follow us