/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விசைத்தறி தொழிலாளர் போனஸ்: நாளை முடிவு
/
விசைத்தறி தொழிலாளர் போனஸ்: நாளை முடிவு
ADDED : ஜன 06, 2025 02:09 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், விசைத்தறி தொழி-லாளர்களுக்கு போனஸ் பேச்சு வார்த்தை நடந்தது. தாசில்தார் சிவக்குமார் தலைமை வகித்தார். சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் செண்பகராமன் பங்கேற்றார். இதில், தொழிற்சங்கம் சார்பில், 20 சதவீதம் போனஸ் வேண்டும் என, வலியுறுத்தப்பட்-டது.
இதுகுறித்து தாசில்தார் சிவக்குமார் கூறுகையில், ''விசைத்தறி தொழிற்சங்கம் சார்பில், 20 சதவீதம் போனஸ் வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்-கத்தினர், செயற்குழு, பொதுக்குழுவினரிடம் கலந்துபேசி, ஜன., 7ல் தங்கள் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனர். இவர்கள் தங்கள் முடிவை கூறிய பின், மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, நல்லதொரு தீர்வு காணப்படும்,'' என்றார். இதில், கொங்கு பவர்லுாம் உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்க-மேஸ்வரன், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்-தறியாளர்கள் சங்க செயலர் பூபதி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, சரவணன், நஞ்சப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

