sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாற்று பணிக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்

/

மாற்று பணிக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்

மாற்று பணிக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்

மாற்று பணிக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள்


ADDED : ஜூன் 14, 2025 07:50 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 25,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறி கூடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் விசைத்தறியில் வேட்டி, சேலை, லுங்கி, சட்டை, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான விசைத்தறி கூடத்தில், லுங்கி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த, இரண்டு மாதமாக லுங்கி விற்பனை தொய்வு நிலையில் காணப்பட்டது. கடந்த ஓரிரு வாரங்களாக நாளுக்குநாள் லுங்கி விற்பனை சரிவை நோக்கி செல்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் பெருமளவில் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளது.

இதனால், பல விசைத்தறி கூடங்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யாமல் நிறுத்தி விடுமுறை அளித்துள்ளனர். இன்னும் சில விசைத்தறி கூடங்கள், வாரத்தில் மூன்று நாட்கள் தான் செயல்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பலர், மாற்று வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us