/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போனஸ் பேச்சுவார்த்தையை துவக்க விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
போனஸ் பேச்சுவார்த்தையை துவக்க விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போனஸ் பேச்சுவார்த்தையை துவக்க விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போனஸ் பேச்சுவார்த்தையை துவக்க விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:56 AM
பள்ளிப்பாளையம்: 'தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விதைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி தொழி-லாளர்களுக்கு தீபாவளி போனஸ், பேச்சுவார்த்தை நடத்தி சத-வீதம் அடிப்படையில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டு தீபாவளி போனஸ் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.
வழக்கமாக, ஒரு மாத்திற்கு முன்பே விசைத்தறி தொழிலாளர்க-ளுக்கு தீபாவளி போன்ஸ் பேச்சுவார்த்தை, தொழிற்சங்கள், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே துவக்கி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய
பின்பே, இறுதியாக ஒப்-பந்தம் முடிவாகும். இன்னும் தீபாவளிக்கு சில நாட்கள் மட்-டுமே உள்ளன. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை துவக்க வில்லை
இதனால், உடனடியாக போனஸ் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்; விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று பள்ளிப்பாளையம்
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில், மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் லட்சு-மணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், விசைத்-தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.