/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிராம வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு
/
கிராம வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிப்பு
ADDED : ஜூன் 13, 2024 06:57 AM
நாமக்கல் : 'வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுபொது மக்கள் பார்வை யிடும் வகையில் தாலுகா, சார்பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைத்தல்
தொடர்பாக, இந்திய முத்திரைச்சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகளின்படி, மைய மதிப்பீட்டு குழு, கடந்த, ஏப்., 26ல்,
நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வையிடும் வகையில் அனைத்து தாசில்தார், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்
பட்டுள்ளது.
மேலும், இதன் விபரம் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில், அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருந்தால், அவற்றை, 15 நாட்களுக்குள், கலெக்டரின் தலைமையிலான வழிகாட்டி மதிப்பீட்டு துணைக்குழுவிடம், வழிகாட்டி மதிப்பீட்டு துணைக்குழு, கலெக்டர் அலுவலகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

