sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு

/

சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு

சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு

சாம்பல் பூசணி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு


ADDED : ஆக 24, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 24, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், :பரமத்தி வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பரமத்தி, மாவுரெட்டி, அர்த்தநாரிபாளையம், கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் சாம்பல் பூசணி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் பூசணிகளை, கேரளா, தமிழக வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர்.

இரண்டு மாதத்திற்கு முன், ஒரு கிலோ சாம்பல் பூசணி, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விற்றதால், அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விற்பனை குறைந்து விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. சாம்பல் பூசணி கிலோ, 2 முதல், 3 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

சாம்பல் பூசணி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை செலவாகிறது. சாகுபடி காலம், 90 நாட்களாகும். 70வது நாள் முதல் அறுவடை துவங்கும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக, 15 டன் மகசூல் கிடைக்கிறது. சாம்பல் பூசணி நடப்பாண்டு நன்றாக செழித்து வளர்ந்து விளைச்சல் பெருகியுள்ளது. ஆனால், மொத்த வியாபாரிகள் சொற்ப விலைக்கு வாங்கி செல்வது ஏமாற்றம் அளிப்பது மட்டுமின்றி, எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்போது, விலை சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us