sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவுகுண்டுமல்லி கிலோ ரூ.320க்கு விற்பனை

/

விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவுகுண்டுமல்லி கிலோ ரூ.320க்கு விற்பனை

விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவுகுண்டுமல்லி கிலோ ரூ.320க்கு விற்பனை

விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவுகுண்டுமல்லி கிலோ ரூ.320க்கு விற்பனை


ADDED : ஏப் 18, 2025 02:26 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்:-விளைச்சல் அதிகரிப்பால், ஏல சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிவடைந்து விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா பகுதியில் உள்ள சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்களை, விவசாயிகள்

அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இவற்றை தினந்தோறும் அறுவடை செய்யும் விவசாயிகள், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு கொண்டுவந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

தற்போது, கோடை வெயில் கொளுத்தி வருவதால், பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதனால் ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம், ஒரு கிலோ குண்டுமல்லி, 600 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 320 ரூபாய்க்கும்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்க்கும்; 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 150 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்த விலை, பராமரிப்பு செலவு, ஆட்கூலிக்கு கூட கட்டுப்படியாகாததால், பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us