/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு
/
கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு
கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு
கொல்லிமலை அடிவாரத்தில் பாக்கு கன்றுகளுக்கு பாதுகாப்பு
ADDED : நவ 04, 2024 04:42 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நிரந்தர வருமானம் தரக்கூடிய பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர்.
மிகவும் உயரமாக வளரும் இந்த பாக்கு மரங்கள், சீசன் காலங்களில் நல்ல வருமானம் தரக்-கூடியதாக உள்ளது. அதிக தண்ணீர், குளிர்ச்சியான பகுதியில் வளரும் என்பதால், இங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.ஆனால், கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் இப்பகு-தியில் வளர்க்கப்பட்ட மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்தன. தற்போது, கொல்லிமலையில் நல்ல மழை பெய்துள்ளதால், இப்-பகுதியில் கூடுதல் ஏக்கர் பரப்பளவில் பாக்கு மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த பாக்கு மரக்கன்றுகள் காற்று, மழைக்கு சாயாமல் இருக்க, விவசாயிகள் தென்னங்கீற்றுகளை கொண்டு மூடி வைத்துள்ளனர்.