sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

/

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புகலெக்டர் அலுவலகம் முற்றுகையால் பரபரப்பு


ADDED : ஏப் 02, 2025 02:37 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:சூரியம்பாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, சூரியம்பாளையத்தில், 6,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், திருச்செங்கோடு நகராட்சி சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை மாற்று பாதையில் அமைக்க வலியுறுத்தி, சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், 500க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் உமாவை சந்தித்து, திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் இருந்து, சூரியம்பாளையம் பகுதிக்கு கழிவுநீர் கொண்டுசெல்லப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்படுவதால், சூரியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி நீராதரங்கள் பாதிக்கப்படும். அதனால், ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த திட்டத்தை எங்கள் ஊர் பகுதியில் செயல்படுத்த வேண்டாம் என, ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். எனவே, இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் நடைமுறைப்படுத்த வேண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா கூறியதாவது:இந்த திட்டத்தை தயார் செய்த அதிகாரிகள் சென்னையில் உள்ளனர். துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் சூரியம்பாளையம் பகுதிக்கு நேரில் வரவழைக்கப்பட்டு, இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us