sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அதிகாரிகளை கண்டித்து பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம்

/

அதிகாரிகளை கண்டித்து பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம்

அதிகாரிகளை கண்டித்து பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம்

அதிகாரிகளை கண்டித்து பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம்


ADDED : ஜூன் 22, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில் இருந்து சாலப்பாளையம் பிரிவு வரை, 2 கி.மீ., துாரமுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ், கடந்த, 2020 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஆனால், இந்த சாலையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், 4 ஆண்டுகளாக அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதை கண்டித்தும், அதிகாரிகளை தமிழர் முறைப்படி உடுக்கை அடித்து வரவழைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தும், முத்துக்காப்பட்டி பஞ்., அலுவலகம் முன், தலைவர் அருள்ராஜேஸ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம் மேற்கொண்டனர்.தகவலறிந்து, அங்கு வந்த தாசில்தார் சத்திவேல் மற்றும் வருவாய்துறையினர், அடுத்த மாதம் சாலையை அளவீடு செய்து கொடுப்பதாகவும், அதற்காக நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us