/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
20 சதவீதம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
20 சதவீதம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 07:27 AM
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அசோகன் தலைமை வகித்தார். நகர செயலர் பாலுசாமி பேசுகையில், ''விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உத்திரவாதம் என்பது இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.
2024ம் ஆண்டுக்கு, 20 சதவீதம் போனஸ் கேட்டு கோரிக்கை வைப்பது என, சிறப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,'' என்றார். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயாளர் வேலுசாமி, மாவட்ட தலைவர் மோகன், சிறப்பு மாவட்டக்குழு உறுப்பினர்கள் தனபால், வெங்கடாசலம், நகர பொருளாளர் வெங்கடேசன், நகர துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.