sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்

/

ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜன.,10ல் சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 12, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட், மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது வரை அதற்கான அரசு உத்தரவு வெளியிடவில்லை. தற்போது இந்தாண்டுக்கான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் மூலம் பழைய கிரைய தொகையான கரும்பு டன் ஒன்றுக்கு, 3,290.50 ரூபாய் மட்டும் தான் மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கரும்புக்கு உடனடியாக டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் அரசு உத்தரவு வழங்கக்கோரியும், இதுவரை வழங்காத தி.மு.க., அரசை கண்டித்தும் ஜன., 10 காலை 11:00 மணிக்கு மோகனுார் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us